Thursday, August 11, 2011

லிச்சி பழம்


லிச்சி பழம் நாம் அதிகம் அறியப்படாத பழம், இருந்தாலும் பெரிய பழக்கடைகளில் இந்த சத்தான பழம் கிடைக்கிறது. சீனாவை  பூர்விகமாகக் கொண்ட இந்தப்பழம், இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளிலும் அதிகமாக விளைகிறது. இவை தவிர நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, லெபனான், கனடா, ரஷ்யா மற்றும் ஏமன் நாடுகளில் இந்தப் பழம் விளைகிறது. லிச்சி மரங்களை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வளர்ப்பதற்கான சூழ்நிலை இருக்கிறது  இந்தப் பழம் கொடைக்கானலில் கிடைக்கிறது. 'லிச்சிப் பழத்தில் ஒயின் தயாரிக்கப்படுகிறது.

   பலாப்பழம் போல வெளிப்புறம் பரபரவென கூர்மையான சிவப்பு நிற தோலைக் கொண்டிருக்கும். உள்புறம் நுங்கு போல கொழுகொழுவென இருக்கும் இந்தபகுதிதான் சாப்பிடக்கூடியது. இது இனிப்புச் சுவையுடன் இருக்கும். உடலுக்கு சக்தி அளிக்கக்கூடியது. பழத்தின் உள்ளே, 2-3 செ.மி., நீலத்தில் கொட்டை இருக்கும். அதை சாப்பிடக்கூடாது. லிச்சி பளத்திள் கொழுகொழு சதைப்பகுதிதான், சத்துகளின் இருப்பிடம்.

    இதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் தோல், எலும்புக்கு நல்லது. கோடை காலத்தில் நோய் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடியது. அதிக கலோரி இல்லாதது என்பதால், நீர்ச்சத்து மிகுந்தது முடியும் அளவு சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால் மலச்சிக்களைப் போக்குகிறது.

   இதில் உள்ள நியாசிந், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகளைக் குறைக்கும். கோடை காலத்தில் அதிகமாக விற்பனைக்கு வருகிறது.
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் கண்ணைக்கவரும் ரோஸ் நிறத்திலான லிச்சி பழங்களை பழ வியாபாரிகள் தற்போது வடமாநிலங்களிலிருந்து கொண்டு வந்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் விற்பனை செய்து வருகிறார்கள். ஏன் லிச்சி மரம் தமிழ்நாட்டில் வளர்க்க முடியாததா? லிச்சி மரங்களை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வளர்ப்பதற்கான சூழ்நிலை இருக்கிறது.

லிச்சி பழத்தின் ஆரோக்கிய தன்மை

இதனை தோட்டம், வீடுகளில் வளர்த்தால் பருவத்தில் ருசியான லிச்சி பழங்களை ஏராளமாக பெறலாம் என்கிறார் விவசாயத்துறையில் ஆய்வு செய்து வரும் முனைவர் ராஜ்பிரவீண்.
லிச்சி மரங்கள் எந்த மண்ணில் வளரும்? எப்படி பராமரிப்பது என்பது பற்றிய சாகுபடிக்குறிப்புகளை அவர் கூறுகிறார். காலம்காலமாக  மண்ணில் ஒரே சாகுபடியை செய்து நொந்து நூலான விவசாயிகள் இந்த புதிய வரவை தங்கள் மண்ணில் பதித்து காசு பார்க்கலாம். இதோ....

" தற்போது சில தனியார் நிறுவனங்களும், விவசாயிகளும் லிச்சி பழ சாகுபடியில் இறங்கி வருகிறார்கள். காரணம், மாம்பழங்களுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்பு இருப்பது போல்,லிச்சிபழத்திற்கு உள்நாட்டில் பலத்த வரவேற்பிருக்கிறது. குறிப்பாக இந்த பழத்தை பயன்படுத்தி பதப்படுத்திய பழச்சாறு உள்ளிட்ட சில பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறார்கள். தற்போது தமிழ்நாட்டில் லிச்சி பழத்திற்கான வரவேற்பு அதிகம். இதற்காக இந்த பழங்களை வியாபாரிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். ஆனால் இதற்கு அவசியமே இல்லை. தமிழ்நாட்டின் பல இடங்களில் லிச்சி மரங்களை வளர்க்க முடியும்.

பொதுவாக வடமாநிலங்களில் லிச்சி மரங்களை மரத்துக்கு மரம் 9 மீட்டர் இடைவெளியில் நடுகிறார்கள். ஆனால் இதனை 7 மீட்டர் இடைவெளியில் நடவு செய்வதன் மூலம் 1 எக்டரில் கூடுதலாக மரங்களை நடமுடியும். அதாவது எக்டருக்கு 200 முதல் 300 மரங்களை நடலாம். நடவு செய்யும் முன் தோட்ட நிலங்களை நன்றாக கொத்தி கிளறி உழுது விட்டு பின்னர் இந்த குழிகளில் இயற்கை உரங்களை கொட்டி வைக்க வேண்டும். பின்னர் அந்தந்த பகுதியின் சீதோஷ்ண நிலைக்கு தகுந்த லிச்சி மரக்கன்றுகளை வாங்கி குழிகளில் நடலாம். குறிப்பாக சீனா, பம்பாய், கொல்கத்தா, க்ரீன் போன்ற லிச்சி கன்று ரகங்கள் தமிழ்நாட்டின் தட்பவெப்பத்தை தாங்கி வளரக்கூடியவை.

இந்த ரகங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு தேர்வு செய்து நட்டபின் அவை வளரத் தொடங்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு மாத இடைவெளியிலும் ஒரு கிலோ தழைச்சத்து, அரை கிலோ மணிச்சத்து மற்றும் ஒரு கிலோ சாம்பல் சத்து உரங்களை இடவேண்டும். வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சவதும் அவசியம். லிச்சி மரக்கன்றுகள் கொஞ்சம் பெரிதான உடன் 15 நாட்களுக்கு ஒரு தடவை நீர்பாய்ச்சலாம். கன்றுகள் செழுமையாக வளர்ச்சி பெற்ற நிலையில் 5 கிலோ ஊட்டமேற்றிய உரம், 150 கிராம் தழைச்சத்து, 150 கிராம் மணிச்சத்து மற்றும் 150 கிராம்  சாம்பல் சத்தை மண்ணுடன் கலந்து விட வேண்டும்.

லிச்சி மரங்கள் வளர்ந்த 7 முதல் 9 ஆண்டுகளில் பலன் கொடுக்க தொடங்கும். பழங்கள் காய்க்க தொடங்கும். இந்த நேரத்தில் 100 கிலோ ஊட்டமேற்றிய தொழுஉரம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 2 கிலோ தழைச்சத்து, 2 கிலோ மணிச்சத்து, 800 கிராம் சாம்பல் சத்து ஆகியவற்றை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.லிச்சிமரங்களுக்கு இடையே ஊடுபயிராக முட்டைகோஸ், வெங்காயம், உருளைக்கிழங்கு, வெண்டை,  கிளாடியோஸ் மரம் ஆகியவற்றை பயிர் செய்யலாம். இதனால் கூடுதல் வருமானம் உறுதி. நன்றாக வளர்ந்த மரத்திலிருந்து, சாதாரண ரகங்களில் கூட ஒரு அறுவடைக்கு 80 கிலோ முதல் 90 கிலோ வரை மகசூல் கிடைக்கும். நல்ல ரக கன்றுகளாக இருந்தால் 100 முதல் 110 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

இந்தியாவில் விளையும் பழவகைகளில் லிச்சிக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெரிய அளவில் கிராக்கி உள்ளது. இதனால் மரம் அறுவடைக்கு தயாராகும் போதே காசு கைக்கு வர வாய்ப்பிருக்கிறது. தற்போது லிச்சி பழத்திலிருந்து பல மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. லிச்சியின் பழச்சாறு, லிச்சி ஸ்குவாஷ், லிச்சி இனிப்புகள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. லிச்சி தோட்டங்களில் தேனீ வளர்ப்பு செய்யலாம். இதுவும் கூடுதல் வருமானத்துக்கு வழிவகுக்கும். எனவே தென்மாவட்டங்களில் லிச்சி பழ தோட்டங்களை உருவாக்குவதன் மூலம் விவசாயிகள் லாபகரமான எதிர்காலத்தை நோக்கி பயணத்தை தொடங்குகிறார்கள் என்று சொல்ல முடியும் என்கிறார் முனைவர் ராஜ்பிரவீன்.

வீடுகளில் லிச்சியை வளர்க்க விரும்புபவர்கள் உங்கள் மாவட்டங்களில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் இந்த மரத்தின் கன்றுகளை பெற முடியும். அணுகி கேளுங்கள்.


இதயத்திற்கும், ஈரலுக்கும் பலம் தரும் லிச்சி!

  • இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம். 
  • பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம். 
  • லிச்சி பழம் இனிப்பான ரோஜா மலரின் வாசனை தரும். பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாப வேலை செய்யும். 
  • ஈரல் உடலின் பல்வேறு விஷங்களால் நொந்து போயிருக்கும். லிச்சியின் பழச்சாறு இந்த விஷத்தன்மையை குறைத்து ஈரலுக்கு உரம் ஊட்டும். 
  • தாகத்தை தணிக்கும். 
  • இந்தோனேஷியாவில் இதன் விதைகளை குடல்சார்ந்த நோய்களை குணப்படுத்தவும், மலேசியாவில் நரம்பு நோய்களை சரிப்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள். 
  • இதன் பூக்களும், வேர்ப்பட்டையும் தொண்டையில் உண்டாகும் பல்வேறு நோய்களை தீர்க்க பயன்படுகிறது.
  • புகைபழக்கம், பாக்கு பழக்கத்தினால் தொண்டைப்பகுதியை ரணப்படுத்தியிருப்பவர்கள் லிச்சி பழங்களை உண்பது நலம். 
  • சீனாவில் பூச்சிகடித்து விட்டால் லிச்சி மரத்தின் இலைகளை சாறு எடுத்து பிழிந்து விடுகிறார்கள்.
  • லிச்சி பழத்தில் உடலின் கட்டுமான உணவு என்று சொல்லப்படும் புரதம் 1.1 கிராம், 
  • தோல்தடிப்பாயும், சொரசொரப்பாகவும் மாறும் தவளைசொறி நோயை கட்டுப்படுத்தும் தாவர கொழுப்பு 0.2 கிராம், 
  • இன்றைக்கு பலருக்கும் அன்றாட பணியில் சிக்கலை ஏற்படுத்தும் மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும் நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லிகிராமும், கால்சியம் உடலில் சேர உதவும் பாஸ்பரஸ் 35 மிகி, உடல் வெளுத்து போவதை தடுத்து நிறுத்தும் இரத்த சிவப்பணுக்களின் கட்டமைப்புக்கு முக்கியமான இரும்பு சத்து 0.7 மிகி, 
  • நாக்கு வீங்குவது, சிவந்து பிளவுபடுதல், வாய்ஓரங்களில் வெடிப்பு உண்டாவதை தடுத்து நிறுத்தும் ரைபோபிளேவின் 0.06 மிகி, 
  • சளி உருவாகாமல் தடுத்து தலைசுற்றல், கிறுகிறுப்பை தடுக்கும் வைட்டமின் சி 31 மிகி, மக்னீசியம் 10 மிகி, பொட்டாஷியம் 159 மிகி, தாமிரம் 0.30 மிகி களோரின் 3 மிகி உள்பட எராளமான சத்துக்கள் லிச்சி பழத்தில் தாராளமாக உள்ளன. 
  • அவ்வப்போது இதனை உணவில் சேர்த்துக் கொண்டால்..உடல்நலன் நிச்சயம் நன்றாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.

No comments:

vedio

film