Friday, September 9, 2011

வெங்காயம்

 
வெங்காயத்தின் தாவரவியல் பேரு அல்லியம் சீபா. இது ஒரு மீட்டர் உயரம் வரை வளரும் தண்டுள்ள சின்ன செடி. இதோட உண்மையான தண்டு செதில் இலைகளால் மூடப்பட்டு குமிழ் தண்டாக காணப்படுது. இந்த தண்டில் இருந்து பசுமையான இலைகள் வெளி வருது.
இந்த தாவரத்தோட பசுமையான இலைகள் செதில் இலைகளால் ஆன குமிழ், தண்டு ஆகியவை மருத் துவப் பயன் உள்ளவை. கிருமிகளுக்கு எதிரானது. வீக்கம், வலி போக உதவுது. ரத்த ஓட்டத்திற்கு சிறந்த மருந்து. மூட்டுவலிக்கு எதிரானது. சளி, ப்ளூ காய்ச்சல், இருமலைக் குணப்படுத்தும் மருந்து இது.
 
பல் சொத்தை போன்ற வாயில் உண்டாகும் நோய்களையும் குணப்படுத்துது. புண்களுக்கு வெங்காயம் பற்று போட்டு கட்டலாம். இதோட சாறு மயக்கத்தைத் தெளிவிக்குது. சிறுநீர்ப்போக்கைத் தூண்டுது. நம்ம வீட்டுல சாம்பார் வைச்சாக்கூட வெங்காயம் தான் போடுவோம். இல்லையா..... 

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர
நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு,
பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை பூசிவர
மறைந்து விடும்.

திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி
முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது
வெங்காயச் சாற்றையும்,குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால்
சீதபேதி நிற்கும்.

வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு
சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து
அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது.
எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப்
பயன்படுத்தலாம். பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை
வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

No comments:

vedio

film